தூத்துக்குடியில் பக்கிள் ஓடையில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சீரமைக்கும் பணியினை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகரம் கே.வி.கே நகர் பகுதியில் பக்கிள் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சீரமைக்கும் பணியை இன்று (25.09.2024) சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் பார்வையிட்டார்.
மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் செல்வின் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்
No comments:
Post a Comment