நேபால் நாட்டில் உள்ள போகுதா மாநிலத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் நேபால், இந்தியா, இலங்கை, மலேசியா, போன்ற பல்வேறு நாடுகளில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டியில் நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவன் ஆலன் சண்டை 55 கிலோ பிரிவில் முதலிடமும், 50 கிலோ சண்டை பிரிவில் சதீஷ் முதலிடமும் பெற்று சாதனை படைத்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை அஇஅதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த மாஸ்டர் கராத்தே டென்னிசன் ஆகியோோரை பாராட்டினார்.
No comments:
Post a Comment