நாகலாபுரத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் இன்று நடைபெற்றது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 16 August 2024

நாகலாபுரத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் இன்று நடைபெற்றது.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி புதூர் ஊராட்சி ஒன்றியம் நாகலாபுரத்தில் கவுண்டன்பட்டி, மாதலபுரம், லட்சுமி புரம்,பட்டிதேவன்பட்டி,மேல அருணாசலபுரம், கீழ அருணாசலபுரம் , நாகலாபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.வி . மார்க்கண்டேயன் அவர்கள் கலந்து கொண்டு,

கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகளுக்கு வேலை உத்தரவு மற்றும் வருவாய்த்துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், மக்களைத் தேடி மருத்துவத்திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகம் வேளாண்மை துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் 

நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார் விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் விமலா புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் ஊராட்சி மன்றத் தலைவர்கள் உலகம்மாள் முனியசாமி, சமுத்திரக்கனி,லட்சுமி, கார்த்திகேயன்,முத்துராஜ்,சண்முகசுந்தரம், மகாலட்சுமி மாவட்ட பிரதிநிதிகள்,V.C.காளிமுத்து, முருகேசன்,வேலுச்சாமி

ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் முத்துராஜ் புதூர் மத்திய ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் பொன்னுத்தாய் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கனக ஜோதி சௌந்தர பாண்டியன் கிளைச் செயலாளர்கள் சுப்பிரமணியன் வேலுச்சாமி மாவட்ட முன்னாள் மாணவரணி துணை அமைப்பாளர் முருகன் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

 தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் செய்தியாளர்:சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad