தூத்துக்குடியில் பள்ளி மாணவனை கம்பால் தாக்கிய வாலிபர் கைது!
தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் தகராறில் பள்ளி மாணவனை கம்பால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்து நகர், புதிய முனியசாமி புரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மனைவி கலைவாணி (38). இவர்களது மகன் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ் மகன் சென்சன் ராஜ் (27). இவர்களது வீடு அடுத்தடுத்து உள்ளதால் கழிவுநீர் கால்வாய் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதில் ஏற்பட்ட தகராறில் சென்சன் ராஜ், கலைவானியின் மகனை கம்பால் தாக்கினாராம். இதில் காயமடைந்த மாணவன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது சம்பந்தமாக கலைவாணி கொடுத்த புகாரின் பேரில் தாளமுத்து நகர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்குப் பதிந்து, சென்சன் ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
No comments:
Post a Comment