ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வந்த கனிமொழி கருணாநிதி எம்.பி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 21 August 2024

ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வந்த கனிமொழி கருணாநிதி எம்.பி.

ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வந்த கனிமொழி கருணாநிதி எம்.பி - ஒன்றிய செயலாளர் இளையராஜா பணமாலை அணிவித்து பிரம்மாண்ட வரவேற்பு வழங்கினார்.

ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வந்த கனிமொழி கருணாநிதி எம்.பி - ஒன்றிய செயலாளர் இளையராஜா பணமாலை அணிவித்து பிரம்மாண்ட வரவேற்பு வழங்கினார்.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட புதியம்புத்தூரில் ஒட்டப்பிடாரம் பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் ஆணையின்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஓட்டப்பிடாரம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளரும் ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா ஏற்பாட்டில் கனிமொழி கருணாநிதி எம்.பி.க்கு பண மாலை அணிவித்தும் கலைஞர் கருணாநிதி, முதல்வர் மு.க ஸ்டாலின் கனிமொழி கருணாநிதி எம்பி ஆகியோர் அடங்கிய பிரம்மாண்ட புகைப்படத்தையும் வழங்கி, வழிநெடுக மலர் தூவையும் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் 2000-க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளையும் வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா ஏற்பாட்டில் கனிமொழி கருணாநிதி எம்.பி பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மேயர் ஜெகன் பெரியசாமி ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர். 

தூத்துக்குடி மாவட்டம் 
ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad