நாசரேத்-பிரகாசபுரம் பரிசுத்த பரலோகமாதா ஆலயத் திருத்தேர் பவனி நடைபெற்றது, - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 16 August 2024

நாசரேத்-பிரகாசபுரம் பரிசுத்த பரலோகமாதா ஆலயத் திருத்தேர் பவனி நடைபெற்றது,

தூத்துக்குடி மறை மாவட்டம், பிரகாசபுரம் பங்கு புதுமைகளின் நாயகியாம், பிரகாசபுரம் பரிசுத்த பரலோகமாதாஆலய 145-வது திருவிழா கடந்த 6 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6:30 மணிக்கு செபமாலை, கொடிபவனியுடன், மாலை 7மணிக்கு கொடியேற்றம் நடந்தது. பின் னர் மறையுரை, நற்கருணை ஆசீர் அருட்பணி நெல்சன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலய சேகரத்தலைவர் அருட்திரு எம். நவராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார். 
முதலாம் திருவிழாவில் சிறப்பு நிகழ்வாக ஜாஸ் பேண்ட் கென்னடி இசைக் குழுவினரின் இசை சங்கமம் நிகழ்வு நடைபெற்றது. 9 ஆம் திருவிழாவான 14ஆம் தேதி புதன்கி ழமை மாலை 7:00 மணிக்கு திருவிழா சிறப்பு மாலை ஆராதனை வடக்கன்குளம் பங்குத்தந்தை அருட்பணி ஜெபநாதன் தலைமையில் நடைபெற் றது.அருட்பணி அருண் மண்ணின் மைந்தர் முன்னிலை வகித்தார். பாளையங்கோட்டை மறை மாவட்ட அருட்பணி புதுமை ஜோசப்ராஜ் மறையு ரையாற்றுகிறார். இரவு 11 மணிக்கு அன்னையின் அற்புத திருத்தேர் பவனியை வடக்கன்குளம் பங்குத்தந்தை அருட்பணி ஜெபநாதன் அர்ச்சித்து துவக்கி வைத்தார்.சிறப்பு நிகழ்வாக வாணவேடி க்கை நடைபெற்றது.

10 ஆம் திருவிழாவான15 ஆம் தேதி வியாழக் கிழமை அன்னையின் மகிழ்ச்சி என்ற தலைப்பில் அதிகாலை 3 மணிக்கு பழைய கோவில் முன்பு தேரடித்திருப்பலி மண்ணின் மைந்தர் அருட்பணி ஒயிட்ராஜா தலைமையில் நடைபெற்றது. காலை 8:00 மணிக்கு புதிய செப மாலை தோட்டம் அர்ச்சிப்பு மற்றும் திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது. காலை 11:00 மணி க்கு அன்னையின் அற்புத திருத் தேர்பவனிநடைபெறுகிறது. 

மாலை 6:30 மணிக்கு நற்கருணை பவனி சாத்தான்குளம் வட்டார முதன் மைக்குரு அருட்பணி செல்வஜார்ஜ் தலைமையில் நடைபெற்றது. மறையுரையை தென்மண்டலம் ஒருங்கிணைப்பாளர் வெனி இளங்குமரன் ஆற்றினார். செய்துங்கநல்லூர் பங்குத்தந்தை ஜாக்சன் அருள் அடிகளார் முன்னிலை வகித்தார். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத் தந்தை தா.சலேட் ஜெரால்ட் தலைமையில் விழாக் குழுவினர், அருட்சகோதரிகள், இறை மக்கள் செய்திருந்தனர்.

திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
அந்தோணி ராஜா.

No comments:

Post a Comment

Post Top Ad