கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் ஐ.ஏ.எஸ் தேர்வு பயிற்சி பட்டறை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 8 August 2024

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் ஐ.ஏ.எஸ் தேர்வு பயிற்சி பட்டறை.

  


கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் ஐ.ஏ.எஸ் தேர்வு பயிற்சி பட்டறை.


தூத்துக்குடி மாவட்டம், ஆகஸ்ட்.08,  கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் இன்று(08.08.2024) அகில இந்திய குடிமைப் பணி தேர்வு முறைகள் குறித்து கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தி இந்து குழுமம் மற்றும் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி இணைந்து நடத்தும் விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில், நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் முனைவர் எஸ்.சண்முகவேல், நேஷனல் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் கே.காளிதாச முருகவேல், கிளை மேலாளர் (சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி, மதுரை) பி.அர்ஜுன் நாதன், மண்டல மேலாளர் (தி இந்து குழுமம்) எஸ்.நாராயணன் மற்றும் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad