எட்டையாபுரத்தில் பரவலான மழை - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 8 August 2024

எட்டையாபுரத்தில் பரவலான மழை


எட்டையாபுரத்தில் பரவலான மழை.


தூத்துக்குடி மாவட்டம், ஆகஸ்ட் .08, தென்மேற்கு பருவ காற்றினால், வளிமண்டலத்தில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் பகுதியில் நேற்று அதிகபட்சமாக 38 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நேற்றைய நிலவரப்படி மாவட்டத்தில் இது அதிகபட்ச மழை அளவாக பதிவாகியுள்ளது.


அதேபோல் விளாத்திகுளம் தாலுகா பகுதிகளில், வைப்பார் மற்றும் சூரங்குடியில் 20 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. மேலும் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களுக்கு இந்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad