திருச்செந்தூர் முருகன் கோவிலில் கருணை அடிப்படையில் வாரிசு ஒருவருக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார் அறங்காவலர் குழு தலைவர் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 8 August 2024

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கருணை அடிப்படையில் வாரிசு ஒருவருக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார் அறங்காவலர் குழு தலைவர்

 


திருச்செந்தூர் முருகன் கோவிலில் கருணை அடிப்படையில் வாரிசு ஒருவருக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார் அறங்காவலர் குழு தலைவர்!


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் கருணை அடிப்படையில் வாரிசு ஒருவருக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார்.


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தவில் கலைஞராக பணிபுரிந்த செல்வன் என்வர் கடந்த 27.10.2023 தேதியில் பணிக்காலத்தில் காலமானார். இதையடுத்து அவரது மகன் மந்திரத்துக்கு கருணை அடிப்படையில் வாரிசு பணி வழங்கிட அரசு உத்தரவிட்டுள்ளது. 


அதன்பேரில் திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் மந்திரத்துக்கு திருக்கோயில் அலுவலக உதவியாளராக பணி நியமன ஆணையினை வழங்கினார். நிகழ்ச்சியின் போது, இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக-தூத்துக்குடி மாவட்ட நிருபர் சுந்தரராமன்.

No comments:

Post a Comment

Post Top Ad