தூத்துக்குடி அருகே விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆகஸ்ட்.20, ஓட்டப்பிடாரம் தாலுகா வர்த்தகரெட்டிபட்டி மேலத்தெருவைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் பண்டாரம் (56) விவசாயி இவருக்கு விபத்தில் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
பல மாதங்கள் ஆகியும் காயம் குணமாகாதால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் தனது வீட்டில் வைத்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தட்டப்பாறை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பொறுப்பு அனிதா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்
No comments:
Post a Comment