தூத்துக்குடி, ஆகஸ்ட்.14, தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆல்பர்ட் ஜான் பதவி ஏற்பு.
முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்த அவருக்கு காவல்துறை சார்பில் அளிக்கப்பட்ட மரியாதை ஏற்றுக் கொண்டு முறைப்படி இன்று ஆகஸ்ட் 14ம் தேதி தூத்துக்குடி மாவட்ட 33வது காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் பொது மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எந்தவித பங்கமும் ஏற்படாத வகையில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். கடலோர மாவட்டம் என்பதால் இந்திய கடலோரப் பாதுகாப்புப் படையுடன் இணைந்து கடற் பகுதி வழியாக நடைபெறும் பல்வேறு கடத்தல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் நடமாட்டம் முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச் செயலில் ஈடுபடும் குற்றவாளிகளின் சொத்தையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து ஒரே காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் காவலர்கள் மீது ஏதும் புகார்கள் வந்தால் உடனடியாக அவர்களை பணியிட மாற்றம் செய்யப்படும் என தெரிவித்தார்.
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.
No comments:
Post a Comment