எத்திலப்பநாயக்கன்பட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாய நலக்கூடத்தை திருமிகு கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள் திறந்து வைத்தார். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 21 August 2024

எத்திலப்பநாயக்கன்பட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாய நலக்கூடத்தை திருமிகு கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி - கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி, எத்திலப்பநாயக்கன்பட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாய நலக்கூடத்தை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான மாண்புமிகு திருமிகு கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள் திறந்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன் கோவில்பட்டி யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜகிருஷ்ணம்மாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

 தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் செய்தியாளர்:சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad