தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள பிள்ளையார்நத்தம் கிராமம் கீழத்தெருவைச் சேர்ந்த முருகன் மகன் சோலைராஜ் கடந்த 19-ந்தேதி மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் இன்று (21/08/2024) திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, மின்னல் தாக்கி உயிரிழந்த சோலைராஜ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, முதல்-அமைச்சரின் பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள பிள்ளையார்நத்தம் கிராமம் கீழத்தெருவைச் சேர்ந்த முருகன் மகன் சோலைராஜ் (31). இவர் அங்குள்ள கரிமூட்டத்தில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 19-ந்தேதி வழக்கம் போல் காலையில் சோலைராஜ் வேலைக்கு சென்றார். மதியம் 2 மணிக்கு மேல் அவர் மட்டும் கரிமூட்டத்தில் பணியில் இருந்தார். இதையொட்டி பயங்கரமாக இடி- மின்னல் வெட்டியது. அப்போது எதிர்பாராதவிதமாக சோலைராஜ் மீது மின்னல் தாக்கியது இதில் சோலைராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது குடும்பத்தினர் சந்தித்து ஆறுதல் கூறி முதல் அமைச்சரின் பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சத்திற்க்கான காசோலை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் செய்தியாளர்:சி.நாகராஜ்
No comments:
Post a Comment