ஆறுமுகநேரி - இருசக்கர வாகனத்தை திருடிய 2 பேர் கைது - இருசக்கர வாகனம் மீட்பு.
ஆறுமுகநேரி, ஆகஸ்ட்.10, கரூர் மாவட்டம் பணிக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் இளையராஜா (30) என்பவர் தூத்துக்குடி ஆறுமுகநேரி பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி கொத்தனார் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் இளையராஜா மேற்படி விடுதியில் கடந்த 31.07.2024 அன்று தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பின்னர் வந்து பார்க்கும்போது அந்த இருசக்கர வாகனம் காணாமல் போனது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து இளையராஜா நேற்று அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ஆறுமுகநேரி பாரதிநகரைச் சேர்ந்த முருகமணி மகன் செல்வம் (34) மற்றும் திருச்செந்தூர் சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த தாஸ் மகன் காளிதாஸ் (35) ஆகிய இருவரும் சேர்ந்து மேற்படி இளையராஜாவின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து ஆறுமுகநேரி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வாசுதேவன் மேற்படி எதிரிகளான செல்வம் மற்றும் காளிதாஸ் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த திருடப்பட்ட ரூபாய் 10,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தார்.
#தூத்துக்குடி மாவட்டம்
#திருச்செந்தூர் தாலுகா
No comments:
Post a Comment