விஸ்வகர்ம மகாஜன சங்கம் பொதுக்குழு கூட்டம் கோவில்பட்டியில் நடைப்பெற்றது!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விஸ்வகர்ம மகாஜன சங்கம் பொதுக்குழு கூட்டம் விஸ்வா மீட்டிங் ஹாலில் நடைப்பெற்றது.
பொதுக்கூட்டத்திற்கு விஸ்வகர்ம மகாஜன சங்க தலைவர் பாலமுருகேசன் தலைமை தாங்கினர். விஸ்வகர்ம நகைத்தொழிலாளர் சங்க தலைவர் முருகேசன், விஸ்வகர்ம தொழிலாளர் சங்க தலைவர் மாடசாமி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விஸ்வகர்ம மகாஜன சங்கத்தின் நிதிநிலை சம்பந்தமாக அறிக்கை மற்றும் விஸ்வகர்ம பள்ளி மற்றும் சங்க வளர்ச்சி நிலை குறித்து ஆலோசனை கூட்டம் மற்றும் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விஸ்வகர்ம மகாஜன சங்க பொருளாளர் முருகேஷ் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
இக்கூட்டத்தில் விஸ்வகர்மா மகாஜன சங்க முன்னாள் தலைவர்கள் கணேசன், பால்சாமி, இராஜமாணிக்கம்
சிறப்புரையாற்றினர்கள் கூட்டத்தில்
துணைத் தலைவர் சண்முகவேல், செயலாளர் காளியப்பன், பொருளாளர் முருகேஷ், பள்ளிச் செயலாளர் பாலசுப்பிரமணியன், நிர்வாக குழு உறுப்பினர்கள் கருப்பசாமி, ஆறுமுகம், தணிக்கையாளர்கள் முனியசாமி, முத்து, உள்பட சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க துணைச் செயலாளர் அந்தோணிராஜ் நன்றியுரையாற்றினர்.
தமிழக குரல் செய்திகளுக்காக- தூத்துக்குடி மாவட்ட நிருபர் சுந்தரராமன்
No comments:
Post a Comment