குரும்பூர் சப் இன்ஸ்பெக்டருக்கு பணிநிறைவு பாராட்டு விழா - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 1 June 2024

குரும்பூர் சப் இன்ஸ்பெக்டருக்கு பணிநிறைவு பாராட்டு விழா

 


குரும்பூர் சப் இன்ஸ்பெக்டருக்கு பணிநிறைவு பாராட்டு விழா



குரும்பூர் சப் இன்ஸ்பெக்டருக்கு அழகப்பபுரத்தில் பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
குரும்பூர் போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த முத்துகிருஷ்ணன் பணிநிறைவு பெற்றார். அவருக்கு குரும்பூர் அருகே உள்ள அழகப்பபுரம் சமுதாயநலக்கூடத்தில் பணிநிறைவு பாராட்டு விழா நடந்தது. ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை முன்னிலை வகித்தார். அழகப்பபுரம் பஞ்., கவுன்சிலர் பாலமுருகன் வாழ்த்தி பேசினார். இதில் குரும்பூர் சப் இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன், கோபால், போலீசார் மற்றும் பொதுமக்கள் பணி பெற்ற சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன்  அவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.



நாசரேத் நிக்சன் செய்தியாளர்

No comments:

Post a Comment

Post Top Ad