பழனியப்பபுரம் பள்ளியில் மாணவ_ மாணவிகளுக்கு
இலவச சீருடை வழங்கும் விழா!
நாசரேத் அருகே உள்ள பழனியப்பபுரம் டின்டிடிஏ நடுநிலைப்பள்ளியில் மாணவ_ மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது . சேகர தலைவர் ஏசுவடியான் துரைசாமி தலைமை வகித்து ஜெபித்து தொடங்கி வைத்தார் . பள்ளி தலைமை ஆசிரியை கிரேனா ஸ்டேன்லி வரவேற்றார். மாணவி களின் நடன நிகழ்ச்சி நடந்தது. மாணவ_ மாணவிகளுக்கு இலவச சீருடை, பேக் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதனை சென்னை பொன்னு குரூப் இன்பராஜ், விஜயகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அன்பளிப்பாக வழங்கினர்.இதில் ஊராட்சி மன்ற தலைவர் நல்ல தம்பி, திருமண்டல பெருமன்ற உறுப்பினர் அருள், சேகர செயலா ளர் ஜெயசிங், பொருளாளர் ஜெய ராஜ், சபை ஊழியர் ஜெபஸ்டின் ராஜகுமார் , ஆசிரியைகள் பிருந்தா, கற்பகம் மற்றும் ஊர் மக்கள், மாணவ_ மாணவிகள் கலந்து கொண்டனர்.ஆசிரியர் எட்வின் நன்றி கூறினார்.
நாசரேத் நிக்சன் செய்தியாளர்

No comments:
Post a Comment