தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட களப்பணியாளர்களுக்கு வாரிய பணியில் பாதுகாப்பு பயிற்சி முகாம்.
திருநெல்வேலி பயிற்சி மையத்தின் சார்பாக அரை நாள் பயிற்சி வகுப்பு 14.05.2024 அன்று திருச்செந்தூர் ராஜ் மஹாலில் வைத்து நடைபெற்றது
திருச்செந்தூர் கோட்ட செயற்பொறியாளர் திரு விஜய் சங்கர பாண்டியன் பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்தார்.
உதவி செயற்பொறியாளர்கள் பேச்சி முத்து, ராம் மோகன், கணேசன் முன்னிலை வகித்தனர்.
து.முத்துராமன் உதவி பொறியாளர் நன்றியுரை தெரிவித்தார்
திருநெல்வேலி பயிற்சி மையத்தின் சார்பாக திரு. செந்தில் உதவி செயற்பொறியாளர்/ பாதுகாப்பு/மண்டல அலுவலகம்/திருநெல்வேலி அவர்கள் வாரிய பணிகளில் பாதுகாப்புடன் பணிபுரிவது தொடர்பாக பயிற்சி அளித்தார்.
பயிற்சியில் திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட பொறியாளர்கள் களப்பணியாளர்கள் சுமார் 80பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

No comments:
Post a Comment