வீரசக்கதேவி ஆலயத்தின் 68வது உற்சவ திருவிழா மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம், மே 10. பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலயத்தின் 68வது உற்சவ திருவிழா இன்று (10.05.2024) மற்றும் நாளை (11.05.2024) நடைபெறுவதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதனையடுத்து பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோவில் வளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்து காவல்துறையினருக்கு ஆலோசனைகள் வழங்கி பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
No comments:
Post a Comment