தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு ‘சீல்’ - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 20 April 2024

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு ‘சீல்’


தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டன.


தூத்துக்குடி மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. தூத்துக்குடி பாராளுமன்ற பொது தேர்தல் வாக்கு எண்ணும் மையமான வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட உள்ள வாக்கு எண்ணும் இயந்திரங்களை 24 மணி நேரம் கண்காணிக்க பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களுக்கான கட்டுப்பாட்டு அறையை தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி பார்வையிட்டார்.


பின்னர், வாக்கு எண்ணும் இயந்திரங்களை வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் இன்று 20.04.2024 நண்பகல் 12 மணிக்கு வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad