திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனம் செய்தார் டிடிவி தினகரன்!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று இரவு சுவாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று மாலை கோயிலுக்கு வந்தார்.
அவருக்கு அ.ம.மு.க கழக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில இணை செயலாளர் மு.ராஜா சுப்பிரமணியன் சார்பில் பூர்ண கும்ப மரியாதை செய்யப்பட்டது.
அவர் இரவு இராக்கால அபிஷேகத்தில் கலந்து கொண்டார். பின்பு ஷண்முகரை தரிசனம் செய்து கொடிமரம் நமஸ்காரம் செய்தார். அதனை தொடர்ந்து சூரசம்ஹார மூர்த்திக்கு விசேஷ அபிஷேகம் செய்து திரிசதி அர்ச்சனை செய்து வழிபட்டார். அவருடன் துணைப் பொதுச்செயலாளர் மாணிக்கராஜா, மாநில துணை செயலாளர் அமைப்புச் செயலாளர் பிஆர் மனோகரன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் ஜானியல் சாலமன் மணிராஜ், தேர்தல் பிரிவு செயலாளர் குமரேசன், மாவட்ட செயலாளர் ராகவன், மாநில தொழிற்சங்க தலைவர் நெல்லை பரமசிவன், முன்னாள் எம்எல்ஏ சிவபெருமாள், எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர்கள் ஆவின் அன்னசாமி, கலா பத்மபாலா, இளைஞர் பாசறை மாநில செயலாளர் மணிகண்டன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், நகர செயலாளர் முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக-சுந்தரராமன்
No comments:
Post a Comment