தூத்துக்குடி, ஏப்ரல். 02, தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இன்று முதல் பராமரிப்பு பணிகள் துவக்கம். ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 16 வரை பணிகள் நடைபெறும் என தகவல்.
இதன் காரணமாக பயணிகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியவர்களின் வசதிக்காக தூத்துக்குடி - சென்னை எழும்பூர் முத்து நகர் ரயில் (12694), தூத்துக்குடி - மைசூர் ரயில் (16235) ஆகியவை ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 16 வரையும், மைசூர் - தூத்துக்குடி ரயில் (16236), ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 15 வரையும் தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என்று தென்னக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment