அமுதுண்ணாக்குடியில் திிமுக வேட்பாளருக்கு ஆதரவாக திமுகவினர் வாக்கு சேகரிப்பு.
திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக அமுதுண்ணாக்குடியில் முன்னாள் மாவட்ட ஆவீன் தலைவர் எஸ் சுரேஷ்குமார் தலைமையில் திமுக கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரித்தனர்.
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் கனிமொழிக்கு ஆதரவாக சாத்தான்குளம் ஒன்றியம் அமுதுண்ணாக்குடியில் முன்னாள் மாவட்ட ஆவீன் தலைவர் எஸ். சுரேஷ்குமார் தஸைமையில் திமுக கூட்டணியினர் வீடு, வீடாக சென்று, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் சாதனைகள் மற்றும் மக்கள் திட்டப்பணிகள் தெரிவித்து வாக்கு சேகரித்தனர். இதில் மத்திய ஒன்றிய திமுக பொருளாளர் மதுரம் செல்வராஜ், ஒன்றிய இளைஞரணி துணை செயலர் கிருபாகரன், கிளை செயலர் ஜெயபால், இளைஞரணியைச் சேர்ந்த பாபு, கிறிஸ்டோபர், கனக செல்வன், மகளிரணி நிர்வாகி பெல்சி. அமுதுண்ணாக்குடி கிராம காங்கிரஸ் கமிட்டித் தலைவர் விஜேந்திரபாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
நாசரேத் நிக்சன் செய்தியாளர்.

No comments:
Post a Comment