மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வாக்கு பதிவு செய்தார்!
தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர், திமுக மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி ஜெயகாந்தியுடன் சொந்த ஊரான உடன்குடி அருகே உள்ள தண்டுபத்தில் உள்ள உடன்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று காலை 7.20 மணி அளவில் வாக்கு பதிவு செய்தார். தொடர்ந்து அமைச்சரின் குடும்பத்தார்கள் வந்து வாக்குப்பதிவு செய்தனர்.
பின்பு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டங்கள், செயல்பாடுகளால் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். அதுவும் தூத்துக்குடி தொகுதி எம்.பி. ஆக இருந்த கனிமொழி மீண்டும் எனது 2-வது தாய் வீடு தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று சொல்லி உள்ளார்கள்.
அவரது மக்கள் பணி, செயல்பாடுகள், திறமைகள் ஆகியவை அனைத்து தரப்பு மக்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது. அதனால் இந்தியாவில் உள்ள அனைத்து எம்.பி.க்களையும் விட கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி அடைந்து சாதனை படைப்பார் என்பது மட்டும் உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment