தேசிய திறனாய்வுத் தேர்வில் சாலைபுதூர் ஏகரட்சகர் பள்ளியில் 2மாணவிகள் தேர்வு பெற்றுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா சாலைப்புதூர் ஏக இரட்சகர் சபை மேல்நிலைப்பள்ளியில் தேசிய திறனாய்வுத் தேர்வு எழுதிய 8ஆம் வகுப்பு மாணவர்கள் பேச்சியம்மாள், அன்லி ஆகிய இரண்டு பேர் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாதந்தோறும் ரூ 1000/- வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ 48000/- கல்வி உதவித்தொகை மத்திய அரசால் வழங்கப்பட உள்ளது. வெற்றி பெற்ற மாணவிகளையும், பயிற்சி அளித்த ஆசிரியர்கள் ராஜபாண்டி, ஜான்சிராணிஸ்டெல்லா ஆகியோரை பள்ளித் தாளாளர் இஸ்ரவேல்தர்மராஜ், பள்ளித் தலைமை ஆசிரியர் பிரான்சிஸ் சேவியர்ராஜ் மற்றும் , பள்ளி கல்விக்கமிட்டி உறுப்பினர்கள் , ஆசிரியர்கள் , அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பாராட்டினர்
.jpg)
No comments:
Post a Comment