அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் வைப்பாரில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருடந்தோறும் சைக்கிள் யாத்திரையாக வருவது வழக்கம். முன்னதாக சைக்கிள் யாத்திரை குழு வைப்பாரில் உள்ள 500 வருட பழமையான சிவன் கோவிலில் இருந்து 41வது ஆண்டாக குருசாமி ராஜகோபால் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பின்பு 100 பக்தர்கள் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பாதயாத்திரை தொடங்கினர்.
தொடர்ந்து இந்த பாதயாத்திரையானது கிழக்குக் கடற்கரை சாலை வழியாக தூத்துக்குடி வந்து பின்பு திருச்செந்தூர் பிரசாத் நகரில் உள்ள ரயிலடி விநாயகர் கோவிலுக்கு வந்தடைந்தது பின்பு குருசாமி தலைமையில் பஜனைகள் பாடி சாமியை வழிபட்டு, திருச்செந்தூர் முருகன் கோவில் சென்று இரவு தங்கத்தேர் இழுத்து அதிகாலையில் கடலில் நீராடி பால்குடம் எடுத்து சுவாமியை தரிசனம் செய்தனர். இதில் வைப்பார் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக-தூத்துக்குடிமாவட்ட நிருபர் சுந்தரராமன்

No comments:
Post a Comment