தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் இணைஆணையரின் அத்துமீறல்களை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் சுவாமிநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதில், மாவட்ட இணைச் செயலாளர் வாமணன், TNGEA மாவட்ட செயலாளர் முருகன், துணைப் பொதுச் செயலாளர் வெங்கடேசன் கண்டன உரையாற்றுகிறார். மாநில துணைத் தலைவர் செந்தூர்ராஜன் நிறைவுரை ஆற்றுகிறார்.

No comments:
Post a Comment