தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோவில் ஐப்பசி மாத திருக்கல்யாண திருவிழா நடைபெற்று வருகின்றன.
அதன்படி 11 ம் திருநாள் ஐப்பசி22 ம் 08.11.2023 புதன்கிழமை மாலை 04:00 மணிக்கு மேல் அம்பாள் தபசு கோலத்தில் எழுந்தருளல் திருவீதி உலா நடைபெற்றது. இரவு 07:00 மணிக்கு மேல் ரிஷப வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் திருவீதி உலா நடைபெற்றது. இரவு 07:30 மணிக்கு மேல் ஸ்ரீ பூவனாநாதசுவாமி ரிஷப வாகனத்தில் ஸ்ரீ செண்பகவல்லி அம்பாளுக்கு காட்சி கொடுத்தல் நடைபெற்றது
No comments:
Post a Comment