ஆதவற்ற குழந்தைகள் இல்லத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடிய மாண்புமிகு மேயர் பி.எம்.சரவணன், தீபாவளி திருநாளன இன்று 12.11.2023 பாளையங்கோட்டை, நீதிமன்ற எதிர்புறம் உள்ள ஆதவற்ற குழந்தைகள் இல்லத்தில் மாண்புமிகு மேயர்.பி.எம்.சரவணன் அங்கு வசிக்கும் குழந்தைகளுக்கு 19 ஆண்டுகளாக தொடர்ந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றார்.
அதன் படி இன்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தார்.
பின்பு குழந்தைகளின் விருப்பப்படி அவர்களுடன் பட்டாசு வெடித்து தீபாவளி திருநாளை கொண்டாடினார். தொடர்ந்து அவர்களுக்கு மதிய உணவு வழங்கி ஆதரவற்ற அந்த குழந்தைகளுடன் ஒன்றாக அமர்ந்து மேயர் பி எம் சரவணன் உணவு சாப்பிட்டு கலந்துரையாடினார்.
No comments:
Post a Comment