குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 18 October 2023

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு.

குலசேகரன்பட்டினம், அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு போக்குவரத்து மாற்றம் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆலோசனை.



குலசேகரன்பட்டினத்தில் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 15.10.2023 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 24.10.2023 அன்று இரவு 12 மணிக்கு நடைபெறும். இதனையடுத்து 25.10.2023 அன்று கொடியிறக்க நிகழ்ச்சியுடன் இத்திருவிழா நிறைவு பெறும்.


இத்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகம் கூடும் நாட்களான 22.10.2023 முதல் 25.10.2023 ஆகிய 4 நாட்களுக்கு பொதுமக்கள் வந்து செல்வதற்கு வசதியாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு போக்குவரத்து மாற்றம் குறித்தும் தற்காலிகமாக வாகன நிறுத்துமிடங்கள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் (18.10.2023) அன்று நேரில் பார்வையிட்டு காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


இந்நிகழ்வின்போது திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன், சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் அருள், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் புருஷோத்தமன், குலசேகரன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் ரெகுராஜன், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய ஆய்வாளர் தர்மர், ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad