வ. உ. சி.அரசு மேல்நிலை பள்ளியில் ஸ்ப்ர்ஷ் உலக தொழு நோய் தின விழிப்புணர்வு வாரம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு தினம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 31 January 2023

வ. உ. சி.அரசு மேல்நிலை பள்ளியில் ஸ்ப்ர்ஷ் உலக தொழு நோய் தின விழிப்புணர்வு வாரம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு தினம்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகாவிலுள்ள
வ. உ. சி.அரசு மேல்நிலை பள்ளியில் ஸ்ப்ரேஷ் உலக தொழு நோய் தின விழிப்புணர்வு நாள் மற்றும் தீண்டாமை ஒழிப்பு தினம் சார்பில் தலைமை ஆசிரியர் மேரி ,ஆசிரிய ஆசிரியைகள்,200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் அனைவரும் உறுதி மொழி மேற்கொண்டனர். அதில் காற்றின் மூலம்  மைக்கோ பாக்டீரியம் லெப்ரே என்ற கிருமியால் பரவும் தொழு நோயால் பாதிப்படைந்த எவரானாலும் அவரிடத்தில் அன்பு செய்து இந்த நோய் குணமடையக்
கூடியது என்பதை எடுத்து கூறி அருகில் இருக்கும் சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ மனைகளுக்கு அழைத்து செல்வதுடன் மனதளவில் அவர்களை
ஊக்குவிப்பதுடன் தேச பிதா காந்தியின் கனவான தொழுநோய் இல்லா இந்தியா உருவாக பாடுபடுவேன் என உறுதிமொழி எடுத்து கொள்ள பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad