தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மின்சார சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திருச்செந்தூர் உபமின் நிலையத்திலிருந்து மின்சார சிக்கன வார விழாவினை முன்னிட்டு கல்லூரி மாணவ/மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மீன்வளம்,மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சி.சண்முகையா (ஒட்டப்பிடாரம்), ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் (திருவைகுண்டம்), மாவட்ட ஊராட்சி தலைவர் அ.பிரம்மசக்தி திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி உட்பட பலர் கலந்து காெண்டனர்.
No comments:
Post a Comment