தேவர் மகாஜன சங்கபொதுக்குழு கூட்டம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 9 October 2022

தேவர் மகாஜன சங்கபொதுக்குழு கூட்டம்.

தேவர் மகாஜன சங்க பொதுக் குழு கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது. தமிழக காருக்குறிச்சி தேவர் மகாஜன சங்க மகாசபைபொதுக்குழு கூட்டம் திருச்செந்தூரில் உள்ள  தேவர் மஹாலில் நடைபெற்றது. 


விழாவில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவிற்கு தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். செயலாளர்கள் பால் ராமச்சந்திரன், ராஜாராம் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பி.என்.ராஜா வரவேற்புரையாற்றினார். 


பொருளாளர் வேலுமணி ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் ஜெயந்தி டாக்டர் கீர்த்தி வழக்கறிஞர் மந்திரமூர்த்தி. பாலு வாத்தியார், ராகுல் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார்கள்.நிகழ்ச்சியை சண்முகசுந்தரத்தேவர் தொகுத்து வழங்கினார். மாணவர்களுக்கான பரிசுகளை குமார், நாராயணன், கணேஷ், ஆனந்த பாலசுப்பிரமணியன், ராமர் ஆகியோர் வழங்கினார்கள். 


நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காருகுறிச்சி தேவர் மகாஜன சங்கம் அறக்கட்டளை, தேசிய தெய்வீக அறக்கட்டளை நிர்வாகிகள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். கணக்கர் கந்தன் நன்றியுரையாற்றினார், விழாவில் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad