முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருவிழா நாட்கள் மட்டுமின்றி தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் கோவிலில் வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருப்பதியை போன்று பக்தர்கள் அமர்ந்து சென்று தரிசனம் செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ. 300 கோடி செலவில் பக்தர்களின் வசதிக்காக மெகா மேம்பாட்டு திட்டப்பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. திருச்செந்தூர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்து தற்போது 12 ஆண்டுகள் கடந்த நிலையில் மகா கும்பாபிஷேக விழா பணிகளும் ஒருங்கிணைந்து நடைபெற உள்ளது.
மேலும் மாற்றுத்திறனாளி பக்தர்களும் கடலில் புனித நீராடி விட்டு, கோவிலில் சாமி தரிசனத்துக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இந்நிலையில் மெகா திட்டப்பணிகளை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
No comments:
Post a Comment