தூத்துக்குடி மாவட்டம் அம்மன்புரம் மூலக்கரை வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினத்தை முன்னிட்டு மரியாதை செலுத்தினார்கள். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆணையின்படி. கழக தலைமை நிலைய செயலாளர் , தென் மண்டல பொறுப்பாளர், கயத்தார் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர், கடம்பூர் இளைய ஜமீன்தார், SVSP மாணிக்கராஜா ஆலோசனைப்படி அமமுக சார்பில் கழக அமைப்புச் செயலாளர்கள் விபி குமரேசன் தலைமையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.மனோகரன் தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழக செயலாளர் பிரைட்டர், கழக இளைஞர் பாசறை செயலாளர் வி.மணிகண்டன் கழக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் பூலோக பாண்டியன், கழக மகளிர் அணி இணைச் செயலாளர் சண்முக குமாரி, கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் எம்.ராஜா, மற்றும் பலர் அம்மன்புரம் மூலக்கரையில் அமைந்துள்ள வெங்கடேஷ் பண்ணையார் அவர்களின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment