செந்தில் முருகன் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்" பள்ளி மேலாண்மை குழு "மறுகட்டமைப்பு தேர்வுக்கான கூட்டம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 9 July 2022

செந்தில் முருகன் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்" பள்ளி மேலாண்மை குழு "மறுகட்டமைப்பு தேர்வுக்கான கூட்டம்

செந்தில் முருகன் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்  பள்ளி தலைமையாசிரியை மாரியம்மாள் தலைமையில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு தேர்வுக்கான கூட்டம் நடந்தது. இதில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி ராணி மகாராஜபுரம் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி ஆசிரியர்  மல்லிகா பார்வையாளராக கலந்து கொண்டார்.  கூட்டத்தில் பேச்சியம்மாள் மேலாண்மை குழுவின் தலைவராகவும், கவிதா துணைத்தலைவராகவும்,பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், கோ சந்திரசேகர், ஆசிரியர் பயிற்றுனர் ஜெயலட்சுமி,உதவி தலைமையாசிரியை சங்கரி,  நகர்மன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி, அர்ச்சனா மற்றும் பெற்றோர்கள்,ஆசிரியர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். இறுதியாக பள்ளியின் மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் செந்தூர் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் பள்ளிக்கு கணினி ஒன்று வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad