ஜெயா பாலிடெக்னிக் கல்லூரியில் 10வது ஆண்டு பட்டயம் வழங்கும் விழா - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 20 May 2022

ஜெயா பாலிடெக்னிக் கல்லூரியில் 10வது ஆண்டு பட்டயம் வழங்கும் விழா

தூத்துக்குடி சேர்வைக்காரன் மடம் சக்கம்மாள் புரதிலுள்ள உள்ள ஜெயா பாலிடெக்னிக் கல்லூரியில் 10வது ஆண்டு பட்டயம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மதுரை மாவட்ட நீதிபதி (ஓய்வு) என். ராபி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கல்லூரியில் பயின்ற மாணவ மாணவிகளுக்கு அவர் பட்டயங்களை வழங்கினார்.
நிகழ்வில் பேசிய அவர்
குறிக்கோள்  இல்லாத வாழ்க்கை செப்பனிடாத தடத்தில் பயணிக்கும் பயணம் போல் ஆகும் எனவும் வாழ்வில் தன்னை சுற்றி உள்ளவர்களுக்கு நல்லது நினைத்தால் நல்லது நடக்கும் எனவும் நல்லது நினைக்கா விட்டால்  நாம் நன்மையை பெரிவது கடினம் என கருத்துகளை சிறிய கதைகள் மூலம் மாணவர்களுக்கு கூறி அர்பணிப்புடன் வீட்டுக்கும், நாட்டுக்கும் உழைக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
அவரது மனைவியார் கிறிஸ்டி பியூலா ராபி (ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை ),கல்லூரியின் தலைவர் வி. யேசு  தாஸ் (ஓய்வு பெற்ற நெடும்சாலை துறை பொறியாளர் ) முதல்வர் அ.ஜான்சன் (பொறுப்பு )மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், அலுவலக ஊழியர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad