தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பேரூராட்சியிலும் ஒன்றியத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பா.ஜ.க வின் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பிரிவு சார்பில் தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய அடையாள அட்டை பதிவு முகாம் நடைபெற்று வருகிறது.
முதலூரில் பதிவு செய்யப்பட்ட தேசிய நலவாரிய அட்டை வழங்குதல் கிளைத்தலைவர் ரவிசந்திரன் இல்லத்தில் வைத்து நடைப்பெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் கணேசன், ஒன்றிய தலைவர் செந்தில், பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் மகேஸ்வரன், துணைத்தலைவர்கள் சரவணன், ராஜா ராஜபாண்டியன் (புத்தூர்) சங்கர், மாவட்ட மகளிர் அணி துணை தலைவி லெட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமாரவேல், ஒன்றிய பொதுச்செயலாளர் ராம்மோகன், துணைத்தலைவர் ஜெயசுந்தர்ராஜ், அமைப்பு சாரா பிரிவு ஒன்றிய தலைவர் சொ.பழனிவேல், வணிகர் பிரிவு துணைத்தலைவர் செந்தில்குமார், இளைஞர் அணி துணைத்தலைவர் சண்முகநாதன், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment