காங்கிரஸ் முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் சிகிச்சை பலனின்றி சென்னையில் இன்று உயிரிழந்தார். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 14 December 2024

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் சிகிச்சை பலனின்றி சென்னையில் இன்று உயிரிழந்தார்.

உடல் நலக்குறைவால் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதனையடுத்து அவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தொண்டர்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர். தொடர்ந்து கடந்த ஜூன் ஜூலை மாதங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த காங்கிரஸ் நிகழ்ச்சிகளிலும் பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசி வந்தார்.

இந்த நிலையில் திடீர் உடல்நல கோளாறு காரணமாக இளங்கோவன், கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் நிமோனியா காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அப்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பதாக அவ்வப்போது மருத்துவமனை தகவல் சொன்னது.

மேலும், கடந்த மாதம் 28ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்த போதும் நோயின் தீவிரம் மற்றும் வயது முதிர்வு காரணமாக ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நிலை தொடர்ந்து மோசமானது. இதற்கிடையே கடந்த ஒரு வாரமாக அவர் தீவிர நோய் பாதிப்புக்கு உள்ளான நிலையில் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இன்று 14.12.2024 காலை இளங்கோவன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த செய்தி காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இளங்கோவன் மறைவு காங்கிரசுக்கு பேரிழப்பு எனக் கூறியிருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை. தமிழ்நாடு காங்கிரஸில் இரண்டு முறை தலைவராக பொறுப்பு வகித்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.ஈவிகே சம்பத் - சுலோச்சனாவின் மகனான இவர் பெரியாரின் பேரன் என்பதும் குறிப்பிடத்தக்கதது.

No comments:

Post a Comment

Post Top Ad