தூத்துக்குடி நாசரேத் திருமண்டல இருபத்தொன்றாவது ஸ்தோத்திர பண்டிகை முன்னிட்டு மிஷனரிகளை நினைவு கூறும் பவனி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 19 October 2024

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல இருபத்தொன்றாவது ஸ்தோத்திர பண்டிகை முன்னிட்டு மிஷனரிகளை நினைவு கூறும் பவனி.

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல இருபத்தொன்றாவது ஸ்தோத்திர பண்டிகை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்த மிஷனரிகளை நினைவு கூறும் பவனி நடைபெற்றது. 

அதில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயரும் பிரதமர் பேராயரின் ஆணையாளர் ஆசியூடன் லேச்செயலாளர் கிப்சன் தலைமையில் துணை தலைவர் அருள்திரு. தமிழ் செல்வன் குருத்துவ செயலர் இம்மானுவேல் வான்ஸ்றக், திருமண்டல பொருளாளர் டேவிட்ராஜ், உயர்நிலைப்பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங், நாசரேத் சபைமன்ற தலைவர் வெல்ற்றன் ஜோசப், மெஞ்ஞானபுரம் சபைமன்ற தலைவர் டேனியல் எட்வின், சாயர்புரம் சபைமன்ற தலைவர் அகஸ்டின் கோயில்ராஜ், நாசரேத் பேராலய தலைமை குருவானவர் ஹென்றி ஜீவானந்தம் தொடர்புத்துறை செயலர் பாஸ்கரன், சமூக நலத்துறை செயலர் ஜெபக்குமார் ஜாலி, பாலியர் நண்பன் செயலர் எமில்சிங் அனைத்து குருமார்களும், சபை மக்கள் அனைவரோடும் பங்குபெற்றனர்.

நாசரேத்தில் மிகச்சிறப்பாக பணியாற்றிய நாசரேத்தின் தந்தை கனோன் ஆர்தர் மர்க்காஷியஸ், அனி கேமர், தாமஸ் பிரதர்டன், அனி பிரதர்டன் மற்ற மிஷனெரி கல்லறைகளுக்கும் மலர் மாலை அணிவித்து அன்னார்களின் நற்சாட்சிக்காக சிறப்பு ஜெபம் ஏறெடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad