வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்: 3பேர் கைது! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 11 October 2024

வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்: 3பேர் கைது!

வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்: 3பேர் கைது!

தூத்துக்குடியில் டாஸ்மாக் அருகே வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி பொன்னகரத்தை சேர்ந்தவர் துரைசாமி மகன் சிவமுத்து ராஜா (43), இவர் பூபாலராயர் புரத்தில் உள்ள டாஸ்மார்க் கடை முன்பு நின்று கொண்டிருந்தாராம். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த லூர்துசாமி மகன் ஜெர்வின் (25), சாந்தி நகரை சேர்ந்த அருள்தாஸ் மகன் கிங்ஸ்டன் (40), சின்ன கடை தெருவை சேர்ந்த தாமஸ் மகன் பிரவீன் குமார் (35) ஆகிய 3 பேரும் சேர்ந்து அவரிடம் தகராறு செய்தார்களாம்.

மேலும் அவர்கள் 3 பேரும் சேர்ந்து சிவமுத்து ராஜாவை கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இது குறித்து வடபாகம் காவல் நிலையத்தில் சிவமுத்து ராஜா கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


 -தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad