திருச்செந்தூரில் அறநிலையத் துறை அமைச்சர் இன்று (09.10.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 9 October 2024

திருச்செந்தூரில் அறநிலையத் துறை அமைச்சர் இன்று (09.10.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் பக்தர்களின் வசதிக்காக நடைபெற்றுவரும் பெருந்திட்ட வளாகப் பணிகள் மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி கட்டடத்தினை மாண்புமிகு இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு இன்று (09.10.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இந்த ஆய்வின்போது, சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர்.பி.சந்திரமோகன், இந்து சமய அறைநிலையத் துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், இந்து சமய அறைநிலையத் துறை கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) டாக்டர். ஆர்.சுகுமார்

அறங்காவல் குழுத் தலைவர் அருள் முருகன், மாவட்ட ஊராட்சித் தலைவர் அ.பிரம்மசக்தி, இணை ஆணையர் ஞானசேகரன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad