தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட எதிரி கைது.
ஆறுமுகநேரி காமராஜபுரத்தைச் சேர்ந்த முத்து மகன் சதீஷ் (27) மற்றும் ஆறுமுகநேரி ராஜமன்னியாபுரம் பகுதியைச் சேர்ந்த சூசைராஜ் மகன் பிரவீன் (20), மற்றும் சிலர் சேர்ந்து ஆறுமுகநேரி காமராஜபுரத்தில் உள்ள இவர்களது நண்பரின் வீட்டில் மது அருந்திய போது இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த பிரவீன் மற்றும் இருவர் சேர்ந்து மேற்படி சதீஷிடம் தகராறு செய்து அவரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து சதிஷ் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஷேக் அப்துல் காதர் வழக்குபதிவு செய்து எதிரி பிரவீனை கைது செய்தார். மேலும் இதுகுறித்து ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு மற்ற எதிரிகளை தேடி வருகின்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment