திருச்செந்தூர், ஆகஸ்ட்.17, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல். திருமாவளவனின் 62 ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. தூத்துக்குடி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்செந்தூர் நகராட்சி அலுவலகம் முன் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து திருமாவளவனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினர். மேலும் கடந்த ஆண்டு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட துணை அமைப்பாளர் தனுஷ்கோடி பரிசு வழங்கி பாராட்டினார். தொடர்ந்து திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடந்தது.
இந்நிகழ்ச்சியில். முன்னாள் மண்டல செயலாளர் தமிழினியன், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வழக்கறிஞர் ராஜ்குமார், மாநிலத் துணை செயலாளர் வனஜா கர்ணன்,மகளிரணி மாவட்ட துணை செயலாளர் ஷர்மிளா, மீனவரணி மாநில துணைச் செயலாளர் மங்கை சேகர், முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் ரகுவரன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்டத் துணை அமைப்பாளர் முன்னோடி தமிழன், கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை திருச்செந்தூர் ஒன்றிய அமைப்பாளர் டெல்லி குமார், காயல்பட்டினம் நகர செயலாளர் அம்பேத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலைச் செழியன் செய்திருந்தார்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment