இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள்
இந்தியாவின்முன்னாள் ஜனாதிபதி, ஏவுகணை எழுச்சி நாயகன் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்தில் தமிழக மாணவர் இயக்கம் சார்பில் அப்துல் கலாம் அய்யாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.. இந்நிகழ்ச்சிக்கு கோவில் உதவி காவல் ஆய்வாளர் திரு ரத்னவேல் பாண்டியன் அவர்கள் அப்துல் கலாம் ஐயாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்... தமிழக மாணவர் இயக்கச் செயலாளர் சிவனேசன், கலாம் சட்ட அலுவலக வழக்கறிஞர் பிரகாஷ், மாநில பொருளாளர் திருப்பதி விஜி, மாநில அமைப்பாளர் அஜித்குமார், ஒருங்கிணைப்பாளர் மதன்ராஜ், கலாம் சட்ட அலுவலக உதவியாளர் சேக் முகமது, மற்றும் ஆட்டோ ஓட்டுனர் சங்க நிர்வாகிகள், கார் ஓட்டுநர் சங்கம் நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு அய்யாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து சிறப்பித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment