தூத்துக்குடியில் மின் கம்பம் சரிந்து விழுந்து மின்வாரிய ஊழியர் காயம் - உதவியாளர் பலி - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 27 April 2024

தூத்துக்குடியில் மின் கம்பம் சரிந்து விழுந்து மின்வாரிய ஊழியர் காயம் - உதவியாளர் பலி

 


தூத்துக்குடியில் மின் கம்பம் சரிந்து விழுந்து மின்வாரிய ஊழியர் காயம் - உதவியாளர் பலி


தூத்துக்குடி அண்ணாநகர் 9ஆவது தெருவைச் சேர்ந்த பெத்துராஜ் மகன் பெத்துக்குமார் (27). இவர் மின் ஊழியருக்கு உதவியாளராக வேலை செய்து வந்தாராம். இந்நிலையில், நேற்று காமராஜ் நகர் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் பழுது நீக்கும் பணிக்காக மின் ஊழியர் சண்முகராஜ் என்பவருடன் சென்றுள்ளார். அடிப்பகுதி உடைந்து சேதமடைந்த நிலையில் இருந்த மின்கம்பத்தில் ஏறி சண்முகராஜ் பழுது பார்த்துக் கொண்டிருக்கும் போது, மின்கம்பம் சரிந்து விழுந்துள்ளது. இதில் கீழே நின்று கொண்டிருந்த பெத்துகுமார் மீது விழுந்ததாம்.  இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெத்து குமார் உயிரிழந்தார். மேலும் காயமடைந்த மின் ஊழியர் சண்முகராஜ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல்றிந்தத தென்பாகம் போலீஸார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


#தூத்துக்குடி மாவட்டம் & தாலுகா.

No comments:

Post a Comment

Post Top Ad