தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக தாக்கி கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த எதிரி கைது.
செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கால்வாய் பகுதியை சேர்ந்த சுடலை மகன் மாயாண்டி (33) என்பவரை கடந்த 03.08.2023 அன்று முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த சுடலைக்கண்ணு மகன் இசக்கிபாண்டி(50) உட்பட சிலரை செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
மேலும் மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட செய்துங்கநல்லூர் கால்வாய் பகுதியை சேர்ந்த சுடலைக்கண்ணு மகன் தெய்வ கண்ணன் (35) என்பவரை செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் தேடி வந்தனர். இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் மேற்பார்வையில், செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாப பிள்ளை மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் பிரெட்ரிக்ராஜன் மற்றும் தலைமைக் காவலர்கள் காசி, மணிகண்டன், மற்றொரு மணிகண்டன், காவலர்கள் பிரபுபாண்டி மற்றும் முருகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, மேற்படி எதிரி தெய்வ கண்ணனை இன்று கைது செய்தனர்.
மேலும் இதுகுறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment