குலசேகரன்பட்டினம் - சூரசம்ஹாரம் நிகழ்ச்சி 2500 போலீசார் பாதுகாப்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 24 October 2023

குலசேகரன்பட்டினம் - சூரசம்ஹாரம் நிகழ்ச்சி 2500 போலீசார் பாதுகாப்பு.

தூத்துக்குடி மாவட்டம்  குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா சூரசம்ஹார நாளான இன்று (24.10.2023) பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில்  தரிசனத்திற்கு வருவதையடுத்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் 5 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 20 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 68 காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட 2500 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.


மேற்படி திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் இன்று குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து கவனித்து வருகிறார்.

No comments:

Post a Comment

Post Top Ad