தூத்துக்குடி - பணியின்போது கொலை வழக்கில் சம்மந்தப்பட்டு கைது செய்யப்பட்ட தலைமை காவலர் டிஸ்மிஸ். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 21 September 2023

தூத்துக்குடி - பணியின்போது கொலை வழக்கில் சம்மந்தப்பட்டு கைது செய்யப்பட்ட தலைமை காவலர் டிஸ்மிஸ்.


தூத்துக்குடி மாவட்டத்தில் பணியின்போது கொலை வழக்கில் சம்மந்தப்பட்டு கைது செய்யப்பட்ட தலைமை காவலரை பணியில் இருந்து டிஸ்மிஸ் (Dismissed from Service) செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவு.


தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் பொன்மாரியப்பன். இவர் கடந்த 09.05.2021 அன்று மத்தியபாகம் காவல் நிலையத்தில் உடல்நிலை சரியில்லை என்று காவல் நிலைய உதவி ஆய்வாளரிடம் பிணி அறிக்கை செய்து, பிணிக்கடவுச்சீட்டு வாங்கி விட்டு சென்றவர் அதே நாள் இரவு தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவருடன் சேர்ந்து தூத்துக்குடி பாத்திமா நகரை சேர்ந்த லூர்து ஜெயசீலன் என்பவரை கொலை செய்த வழக்கில் 10.05.2021 அன்று கைது செய்யப்பட்டு, பின் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நடுவரின் உத்தரவின்படி கடந்த 22.05.2021 அன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.


இவர் மீது துறை ரீதியாக நடைபெற்ற விசாரணையில் மேற்படி தலைமை காவலர் மீதான குற்றம் நிரூபணம் ஆனதையடுத்து ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த காவல்துறையின் கட்டுக் கோப்பை சீர்குலைத்து பொதுமக்களின் மத்தியில் காவல்துறையின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் குற்றசெயல் புரிந்துள்ள தலைமை காவலர் பொன்மாரியப்பனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பணியில் இருந்து டிஸ்மிஸ் (Dismissed from Service) செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad