சென்னையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளராக இருந்த காசி என்பவர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மின்வாரிய வரி ஏய்ப்பு தொடர்பாக மின்வாரிய ஒப்பந்த நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் வருமான வரித் துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அனல் மின்நிலைய ஒப்பந்த பணிகளுக்கும் பில்களுக்கும் 10% கமிஷன் அமைச்சருக்கு கொடுத்தால்தான் ஒப்பந்தம் கிடைக்கும் நிலை உள்ளதாக ஒப்பந்தார சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment